Kumari Palany & Co

No. of views : (2510)

பிளஸ் 2 தனித்தேர்வு: நாளை தொடக்கம்

Posted on: 21/Sep/2010 4:32:04 AM
பிளஸ் 2 மற்றும் மெட்ரிக்குலேஷன் தனித் தேர்வு நாளையும், பத்தாம் வகுப்பு தனித் தேர்வு 24ம் தேதியும் தொடங்குகின்றன.பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதமும், பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் ஏப்ரல் மாதமும் நடந்தது. இந்த இரண்டு வகை தேர்வுகளில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தனித் தேர்வுகள் நடக்கிறது.அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் நாளை தொடங்கி, அக்டோபர் 4ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் 38,500 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் நாளை தொடங்கி அக்டோபர் 4ம񉯅 தேதி முடிகிறது. இந்த தேர்வை 3,643 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தனித் தேர்வு 24ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதி முடிகிறது. இந்த தேர்வை 75,325 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 
பிளஸ் 2 தேர்வு அட்டவணை
செப்.    22    &    மொழித்தாள் 1
 23    &    மொழித்தாள் 2
 24    &    ஆங்கிலம் 1
 25    &    ஆங்கிலம் 2
 27    &    இயற்பியல், வணிகவியல்
28    &    வேதியியல், பொருளியல்
 29    &    உயிரி வேதியியல்,
 30    &    உயிரியல், வரலாறு, தாவரவியல்
அக்.    1    &    அடிப்படை அறிவியல், புவியியல்
 4    &    வணிக கணிதம், இந்திய பண்பாடு
மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை
செப்.    22    &    மொழித்தாள் ௧
 23    &    மொழித்தாள் 1
 23    &    மொழித்தாள் 2
 24    &    ஆங்கிலம் 1
 25    &    ஆங்கிலம் 2
 27    &    கணக்க&#ு தாள் 1
 28    &    கணக்கு தாள் 2
 29    &    அறிவியல் தாள் 1
 30    &    அறிவியல்தாள் 2
அக்.     1    &    வரலாறு மற்றும் சிவிக்ஸ்
 4    &    புவியியல் மற்றும் பொருளாதாரம்
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
செப். 24    &    தமிழ் 1ம் தாள்
 25     &    தமிழ் 2ம் தாள்
 27    &    ஆங்கிலம் 1ம் தாள்
 28    &    ஆங்கிலம் 2ம் தாள்
29    &    கணக்கு
 30    &    அறிவியல்
அக். 1    &    சமூக அறிவியல்