வங்கக் கடலில் இலங்கை கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கன மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுவையில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருசசி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
For more inquiries please contact: